மாதாந்தம் செலுத்துவன் மூலம்

பின்தங்கிய விவசாயிகள், மற்றும் கைத்தொழில்கள், குடிசைக் கைத்தொழில்களில் ஈடுபடுபவர்களை மேம்படுத்துவதன் மூலம், எங்கள் தாயகத்தை ஆரோக்கியமான தேசமாக கட்டியெழுப்ப, நமதுழைப்பு நிறுவனம் முற்படுகின்றது. அதே சமயம், கடந்த இரு வருடங்களாக தனிப்பட்ட ஒருவராலேயே இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இந்த பாரிய முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்கவும், விரிவுபடுத்தவும், புலம்பெயர்ந்தோர் உங்கள் ஒவ்வொருவரினதும் பங்களிப்பையும், ஆதரவையும் வேண்டி நிற்கின்றோம்.

எனவே எங்கள் பணிகளுக்கு ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டு, அனைவருமே பங்காளிகளாகி, எல்லாராலும் முடியக்கூடிய, உங்கள் நாட்டின் ஒற்றை நாணயத்தை, பரீட்சாத்தமாகவாவது குறைந்தது ஆறுமாதங்களுக்கு, மாதாந்தம் செலுத்துவன் மூலம் உங்கள் பங்களிப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்