எம்மைப்பற்றி
உங்களுக்கு தெரியுமா?
நமது அமைப்பினால் என்ன செய்யவிருக்கிறோம்
பலதரப்பட்ட இந்த முயற்சிகளின் முதல் படியாக நம் காலடி எடுத்து வைக்க நினைப்பது / தெரிவு செய்வது உணவு உற்பத்தியாகும் தன்னிறைவை உள்ளகத்தே கொண்ட விவசாயமாகும். அதற்காக முதலில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசம் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களாகும். இவ்வாறு வடக்கு கிழக்கிற்கு முக்கியத்துவம்வழங்குவதற்கு எண்ணில் அடங்கா முன்னுரிமைகள் காரணமாகின்றன. எனவே இப்படி பட்ட விவசாயத்தை வடக்கு கிழக்கில் எப்படி எவ்வாறு எங்கு தொடங்கி எமது சிந்தனையை செயல்படுத்தலாம் என்பதை முடிந்தவரை விபரமாக விளக்குவோமேயானால்
ஒவ்வொரு பிரதேசத்திலுமுள்ள கள விவசாயிகளை ஒன்றுசேர்த்து தேவைக்கு ஏற்றவாறு குழுக்களாக பிரித்தல்.
ஒவ்வொரு குழுக்களையும் நில,நீர்,வசதிக்கேற்ப தகுந்த விவசாய முறையை பரிந்துரை செய்தல் /ஏற்படுத்திக்கொடுத்தல்.
பரிந்துரைத்த விவசாய முறைகளுக்குத்தேவையான உர,இயந்திர,நீர் வசதிகளை பரிந்துரை செய்தல் /ஏற்படுத்திக்கொடுத்தல்.
பரிந்துரைத்த விவசாய முயற்சியில் அவர்களுக்கு எவ்வகையிலும் நட்டம் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை வழங்குதல், அவ்வாறு நட்டம் ஏற்படும் பட்சத்தில் ஏற்படும் நட்டத்தொகையுடன் இலாபத்தொகையையும் மானியமாக வழங்கப்படும்.
பரிந்துரைகளோடு நிறுத்தாமல் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தல்